search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர போலீஸ்"

    • பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
    • முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ரகூப் (வயது 22), அல்தாப் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.

    அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள முகமது ரகூப், அல்தாப் ஆகியோரிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை திருப்பூர் மாநகரில் 10 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • கடந்த ஆண்டு சென்னையில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    • விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும், வாகன திருட்டை கண்காணிக்கவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிவதற்காக கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    ஏ.என்.பி.ஆர். எனப்படும் இந்த கேமராக்கள் போக்குவரத்து சிக்னல்களில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானாக படம் பிடித்து கண்டறியும். சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனங்கள், சிக்னல் எல்லைக் கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்கள், செல்போன் பேசிக் கொண்டே செல்பவர்களின் வாகனங்களை அடையாளம் கண்டறியும்.

    இந்த ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வஹான் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் பெயரில் தானாக மின் ரசீதுகள் உருவாக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அவை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதவர்களை அழைத்து வர பிரத்யேக கால்சென்டரும் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும், வாகன திருட்டை கண்காணிக்கவும் சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை மாநகர போலீசார் நாளை (திங்கட்கிழமை) இறுதி செய்கிறார்கள்.

    புதிய கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதோடு ஒரு அறிவார்ந்த வீடியோ மேலாண்மை அமைப்பை இயக்க பயன்படுத்தப்படும். இது சாலைகளில் வாகன திருட்டை கண்காணிக்கவும், எச்சரிக்கை செய்வதற்கான திறனையும் கொண்டுள்ளது.

    இந்த கண்காணிப்பு அமைப்பு திருடப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்து எச்சரிக்கை குரல் அழைப்புகள் மற்றும் தகவல்களை எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப் மூலம் அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

    மேலும் அனைத்து கேமராக்களில் இருந்தும் அதேநேரத்தில் பெறப்பட்ட டேட்டாக்களை ஒருங்கிணைத்து திருடப்பட்ட வாகனம் கொண்டு செல்லப்படும் வழியை கண்காணிக்க உதவும்.

    திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்கள் நடத்தப்படுவதால் இந்த கேமராக்கள் அதை தடுக்க உதவியாக அமையும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த மாதம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
    • ஏப்ரல் மாதத்தில் மூன்றாமிடத்தில் இருந்த திருப்பூர் மாநகரம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

    திருப்பூர்,

    காகித பயன்பாட்டை குறைக்கவும், மின்னணு சாதனங்கள் மூலம் ஆவணங்களை அனுப்பவும் 'மின் ஆளுமை' திட்டம், 1Ñ ஆண்டுக்குமுன் காவல்துறையில்அமலானது.போலீசாரின் அலுவலக துறை சார்ந்த கோப்புகள் அனைத்தும் கணினி மூலம் அனுப்ப இ-ஆபீஸ்மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அதிகளவில் பயன்படுத்தும் மாவட்டம், மாநகர போலீசுக்கு, மாநில அளவில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஒவ்வொரு மாதமும்கவுரவித்து வருகின்றனர்.

    இ-ஆபீஸ் பயன்பாட்டில், 97.5 புள்ளிகள் பெற்று, திருப்பூர் மாநகர போலீஸ் முதலிடம் பிடித்தது. கடந்த மாதம் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் இ-ஆபீஸ் மென்பொருள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 57.5 புள்ளிகளுடன் நெல்லை மாநகரம் இரண்டாமிடம், 52.5 புள்ளிகளுடன் கோவை மூன்றாமிடம் பிடித்துள்ளது.

    மாவட்ட அடிப்படையில் 97.5 புள்ளிகளுடன் கிருஷ்ணகிரி முதலிடம், 41 புள்ளிகளுடன் கோவை பத்தாமிடம், 25 புள்ளிகளுடன் திருப்பூர் 27வது இடம், 10 புள்ளிகளுடன் நீலகிரி 32வது இடத்தை பிடித்துள்ளது.போலீஸ் சரக அடிப்படையில் 92.5 புள்ளிகளுடன் தஞ்சாவூர் முதலிடம், 35 புள்ளிகளுடன் கோவை 7-ம் இடத்தில் உள்ளது. போலீஸ் மண்டல அடிப்படையில், 87.5 புள்ளிகளுடன் மத்திய மண்டலம் முதலிடம், 37.5 புள்ளிகளுடன் கோவை மூன்றாமிடம் பிடித்துள்ளது.மேலும் ஏப்ரல் மாதத்தில் மூன்றாமிடத்தில் இருந்த திருப்பூர் மாநகரம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 23வது இடத்தில் இருந்த திருப்பூர் மாவட்டம், 27வது இடத்துக்கு சென்றுள்ளது. மாநகரம் முதலிடம் பிடித்ததையொட்டி கமிஷனர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோரை கமிஷனர் பாராட்டினார்.

    ×